அரசுப் பேருந்து மோதி பெண் பலி

கோவை பாலக்காடு மெயின் ரோடு பகுதியில் உணவு விடுதி நடத்தி வருபவர் முனிராஜ். இவரது மனைவி புவனேஷ்வரி. செவ்வாயன்று (இன்று) காலை பொருட்கள் வாங்குவதற்காக புவனேஷ்வரி, தனது அண்ணன் மகன் மோகன்தாஸுடன் இரு சக்கர வாகனத்தில் குனியமுத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இவர்களுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களின் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலை தடுமாறி புவனேஷ்வரி கீழே விழுந்த நிலையில் பேருந்தின் பின் சக்கரம் இவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மீது மேற்கு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் அரசு பேருந்து மோதி பெண் இறந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''மாநகராட்சியின் சார்பில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அதிவேகமாக வரும் வாகனங்களால் இவ்வாறான விபத்துகள் தொடர்ந்து ஏற்படுகிறது. இதுகுறித்து, காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' என்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...