மின்வாரிய ஓய்வு பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண தர்ணா போராட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மின்வாரிய ஓய்வு பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் இன்று காலை கோவை டாடாபாத் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எதிரில் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். 



போராட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் அதில், ஓய்வூதியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் காலநிலை பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஒப்பந்தம் மற்றும் சொசைட்டி பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்கவும், மருத்துவ வசதிகளில் குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவ உதவி திட்டத்தில் சேர மீண்டும் அவகாசம் வழங்கவும். சொந்த பணி விடுவிப்பு - நிலவைத் தொகையில் 15 ஆயிரம் பேர்களுக்கு பணப்பயன்கள் கிடைக்கவில்லை அவர்களுக்கு முழுத்தொகையும் வழங்கப்படவும், காலி பணியிடங்களை நிரப்பவும், ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை சட்டம் 1972ன் படி, பணிக்கொடையினை கணக்கிட்டு நிலுவைத்தொகையினை வழங்கவும், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாளுக்கு பிறகு அவர்களது குடும்பத்தில் வருமானம் ஈட்ட முடியாத மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம்  வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இதில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் ராமச்சந்திரன், உதவித் தலைவர்கள் நாச்சிமுத்து, சுப்பிரமணியன், ஆறுமுகம் மற்றும் 150 மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...