கோவையில் 8 வயது சிறுமியின் சிகிச்சைக்காக உதவி கேட்டவரிடம் நூதன மோசடி

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவரது இளைய மகள் ராஜகுமாரி எட்டு வயது, ராஜகுமாரிக்கு பிறவியிலேயே காது மற்றும் வாய் பேசும் திறன் இல்லாமல் பாதிக்கப்பட்டவர். இவரின் அறுவை சிகிச்சைக்காக கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளை நாடி வந்தார். ஆனால் எந்த பயனும் இல்லாததால், முதல்வரின் தனிப் பிரிவிற்கு நாகராஜ் மனு அளித்துள்ளார். 

இதையடுத்து, நாகராஜை மாவட்ட ஆட்சியரை சந்திக்கக்குமாறு முதல்வர் தனிப்பிரிவில் இருந்து பதில் கடிதம் அனுப்பட்டது. ஆனால் மாவட்ட ஆட்சியரை நேரில் பார்க்கவிடாமல் அதிகாரிகள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டுகோள் விடுத்தார். இதை பார்த்து பல்வேறு தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகள் செய்து வந்த நிலையில், நடிகர் மற்றும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையில் இருந்து அழைப்பதாக கூறி பிரவீன் என்பவர் நாகராஜை தொடர்பு கொண்டு அறக்கட்டளை மூலம் மூன்று லட்சம் வரை உதவி செய்வதாக கூறி உள்ளார். 

மேலும் இயக்குநர் பாலா, கோவை சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவில் அறக்கட்டளை என ஏராளமானோர் உதவி செய்ய தயாராக உள்ளதால் ரேசன் கார்டு மற்றும் ஆதார் அட்டை நகல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு பிரவீன் கூறி உள்ளார். அடுத்த இரண்டு நாள் கழித்து ஆன் லைன் வங்கி கணக்கு மூலம் பணம் அனுப்புவதாகவும், இதற்காக மகளின் பெயரின் வங்கி கணக்கு துவங்க எட்டாயிரம் பணத்தை வங்கி மேலாளர் வங்கி கணக்கு அனுப்ப வேண்டும் என கூறி உள்ளார். இதை நம்பி நாகராஜ் வங்கி ஊழியர் என பேசிய சங்கர் என்பவரின் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தி உள்ளார். இதை அடுத்து தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது அனைவரின் தொலைபேசியும் அனைத்து வைக்கப்பட்டதும், அவர்கள் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 

இதை அடுத்து, பாதிக்கப்பட்ட நாகராஜ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போதுமான ஆவணங்கள் இல்லாததால் புகார் எடுக்க முடியாது என கூறியதாக தெரிகிறது இதை அடுத்து கோவை மாநகர காவல் ஆணையரின் புகார் மனு ஒன்றையும் நாகராஜ் கொடுத்துள்ளார். இதில் தன் மகள் பெயரை கூறி அவர்கள் மேலும் மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். குழந்தையின் உதவிக்காக பல்வேறு நல்ல உள்ளங்கள் உதவி செய்ய முன்வந்து கொண்டிருந்த நிலையில், இம்மாதிரியான மோசடி நபர்களின் செயல்கள் வேதனையளிப்பதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...