மொசூலில் தலை துண்டிக்கப்பட்ட 100 உடல்கள் கண்டுபிடிப்பு

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் பகுதியை முற்றிலும் கைப்பற்ற ஈராக் ராணுவமும், குர்து படைகளும் தீவிரமாக உள்ளன. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் ராணுவத்தின் வசம் வந்து விட்டன. இருந்தாலும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மொசூலில் இருந்து 15 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஹம்மாம் அல்-அலில் நகரத்தின் விவசாய கல்லூரியின் வெளியே ஒரே இடத்தில் குவியலாக பிணம் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

எனவே, ராணுவத்தினர் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர். அப்போது அங்கு 100 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது அங்கு தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் நிலையில் அங்கிருந்து தப்பி ஓடிய பொதுமக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்று புதைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கிடையே, மொசூல் பகுதியில் பாஷிகா நகரம் மற்றும் 5 கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளை ஈராக் மற்றும் குர்து கூட்டு ராணுவம் மீட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...