கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே ரூ.6 லட்சம் கொள்ளை- விசாரணை


திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. பவர்லூம் மற்றும் நிலவியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பத்திரப் பதிவுக்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பத்திரப் பதிவு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது, தனது காரை ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே நிறுத்தியுள்ளார். பத்திரப் பதிவு பணிகள் முடித்துவிட்டு காரை நோக்கி வந்த போது காரின் கண்ணாடி வெட்டப்பட்டு உள்ளே இருந்த 6 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.



இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு பாதுகாப்பின் கீழ் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே எந்நேரமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். இந்நிலையில், பட்டப்பகலில், காரின் கண்ணாடியை நேர்தியாக வெட்டி பணம் கொள்ளையடித்திருப்பது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...