மாணவர்களை மின் ஆற்றல் சேமிப்புத் தூதுவர்களாக உருவாக்கும் பயற்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி மற்றும் எஸ்என்எஸ் இராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து மாணவ, மாணவிகளை மின் ஆற்றல் சேமிப்புத் தூதுவர்களாக உருவாக்கும் பயிற்சியின் துவக்க விழா புதனன்று (இன்று) நடைபெற்றது. எஸ்என்எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மின் சிக்கனத்தை வலியுறுத்தும் பொருட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இவ்விழாவினை கோவை மாவட்ட மின் பகிர்மான வட்ட தலைமைப் பொறியாளர் டி.ஆல்தொரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி முன்னாள் தலைவர் எம்.முருகன் சிறப்புரையாற்றினார். 

இதுகுறித்து, தலைமைப் பொறியாளர் டி.ஆல்தொரை நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

''கோவை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திரட்டி மின் சிக்கனத்தை வலியுறுத்தி மின் ஆற்றல் சேமிப்புத் தூதுவர்களாக உருவாக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 100 மாணவர்கள் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தனி நபர் ஒருவர் ஒருநாளுக்கு 1 யூனிட் மின்சாரம் சேமிப்பதன் மூலம், 1 லட்சம் மக்கள் சுமார் 1 லட்சம் யூனிட் மின்சாரத்தினை ஒரே நாளில் சேமிக்கலாம். இதற்காகவே, தற்போது கோவையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. நாளை கற்பகம் பல்கலைக் கழகத்தில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் யூனிட் மின்சாரம் மக்களால் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.



இதில், கோவை மாவட்ட மின் பகிர்மான வட்ட வடமதுரை செயற்பொறியாளர் ஆர்.நந்தகோபால், கோவை வடக்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜி.என்.சுதாகர், மின்னியல் செயற்பொறியாளர் கே.விஜயகௌரி, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் சி.லோகாம்பாள், சீராநாய்க்கன்பாளைய மின் செயற்பொறியாளர் ஆர்.சுப்பிரமணியம், ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி திட்டத்தலைவர் ச.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் வீ.சிவகாமி, மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ஜெய் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...