தேசிய விருதுபெரும் பத்திரிகையாளர் செல்வகுமாருக்கு பாராட்டு விழா

சிறப்பான கட்டுரைகள் எழுதும் செய்தியாளர்களுக்கு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் ஆண்டு தோறும் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தினமலர் கோவை பதிப்பின் முதன்மை நிருபர் செல்வகுமார் எழுதிய ‘ஒரு நதியைத் தேடி’ என்னும் தொடர் கட்டுரையைப் பாராட்டி வரும் 16ம் தேதியன்று தில்லியில் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.



இதற்காக தற்போது ஒட்டுமொத்த தமிழக ஊடகத்துறையும் செல்வகுமாரைக் கொண்டாடி வருகின்றது. அதன் ஒருபகுதியாக, கோவை பத்திரிகையாளர்கள் இணைந்து தேசிய விருதுபெற உள்ள செல்வகுமார்-க்கு, ரயில் நிலையம் அருகே உள்ள மண்டபம் ஒன்றில் பாராட்டு விழா நடத்தினர். இதில் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு செல்வகுமாரை வாழ்த்திப் பேசினர்.

இதைத்தொடர்ந்து, இவ்விழாவில் செல்வகுமார் பேசுகையில், ''காமராஜர் காலத்தில் தொழில்நுட்பம் அதிகமாக இல்லை, ஆனால் பரம்பிக்குளம் உள்ளிட்ட பல அணைகளை கட்டினார். இது மிகவும் பிரம்மிக்கத்தக்கது. இதை அடிப்படையாகக் கொண்டு நீர்பாசன முறையை மேம்படுத்த பல தொடர் கட்டுரைகளை எழுதினோம். மரக்கடத்தல், சூழல் குறித்த கட்டுரைகள் எழுதும் போது மிரட்டல்கள் வந்தன. அவற்றைக் கடந்து செய்திகள் வெளியிட்டோம். அதன் எதிரொளியாக பலர் கைது செய்யப்பட்டனர். இதை நான் தான் செய்யமுடியும் என்பது இல்லை. செய்தியாளர்கள் அனைவரும் செய்யமுடியும். நம்மால் முடியாது என்ற எண்ணத்தை கைவிடுங்கள். இந்த விருதுக்காக என்னை கவுரவித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து நான் உங்களோடு பயனிக்க வேண்டும்'' என அவர் பேசினார்.



இதனைத்தொடர்ந்து, இளம் பத்திரிகையாளர்கள் அவருக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தனர்.



Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...