500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்த பிரதமர்- திமுக வரவேற்பு


நாட்டின் பொருளாதாரத்தை மனதில் வைத்து சீர்திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடைசெய்துள்ள நடவடிக்கையினை திமுக வரவேற்பதாக அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திமுக பொருளாளர் ஸ்டாலின் வருகைபுரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

''நாட்டின் சீர்திருத்தத்தை மனதில் வைத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை திமுக வரவேற்கிறது. இருப்பினும், தேர்தல் நேரத்தில் கருப்புப் பணத்தை மீட்டு சாமானியர்களின்  வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது ?. பொது மக்களுக்கு உரிய காலவகாசம் வழங்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அறிவிப்பு வெளியான போது பெட்ரோல் பங்க், பாலகம், மருந்தகங்களில் 500, 1000 ரூபாய் வாங்கப்படும் என தெரிவித்திருந்தாலும் தற்போது எங்கேயும் அந்த ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதைப்போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...