பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி சாலைகள் பழுது சரி செய்த சில மாதங்களில் மீண்டும் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக ஒருங்கிணைந்த முறையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து பி.எஸ்என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று (இன்று) நடைபெற்றது. 

இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் சாலைகள் பழுது சரி செய்த சில மாதங்களில் பி.எஸ்என்.எல் துறையின் மூலம் கண்ணாடி இறைவடம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் மூலம் மின்சார வடங்கள் பூமிக்கடியில் கொண்டு செல்வதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு ஒருங்கிணைந்து சில சமயங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத் தவிர்த்திடும் வகையில் ஒருங்கிணைந்த முறையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

மேலும், மாநகராட்சியில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்கள், பணிகள் குறித்த விவரங்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தெரிந்துகொண்டு பி.எஸ்என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிகள் அட்டவணைப் படுத்தப்பட்டு மாநகராட்சி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்த முறையில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவித பழுதும் இல்லாமல் சாலைகள் பராமரிக்கப்படும்''. 

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையர் ப.காந்திமதி, நகரப் பொறியாளர் ராஜேந்திரன், பி.எஸ்என்.எல் கோட்டப்பொறியாளர் கொளஞ்சி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...