பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை வங்கிகளில் இன்று மாற்றிக் கொள்ளலாம்..!

சென்னை: ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஒருநாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதும் என்ற காரணத்தால் வங்கிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த ஒருநாள் விடுமுறையில், பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ள வசதியாக வங்கிகள் தேவையான ஏற்பாடுகளைச் செய்தன. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட உள்ளன. மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு சிறப்பு கவுண்டர்களில் இன்று புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு படிவத்தை பூர்த்தி செய்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,000 வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இந்த சிறப்புப் படிவம் இலவசமாக அளிக்கப்படும்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

ஏடிஎம் மையங்கள் இன்றும் விடுமுறை என்பதால், தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், புதிதாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். சுமார் 3 ஆயிரம் போலீசார் சென்னையில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...