பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் ஆலோசனை



கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று (இன்று) நடைபெற்றது. 



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பெருகி வருவதால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்திடும் வகையில் இன்று அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் உபயோகத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பாலித்தீன் பைகள் எளிதில் மக்குவதில்லை, பாலித்தீன் பைகளால் பல்வேறு உடல்நிலைப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதை தடுத்திடும் வகையில் அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை உபயோகிக்குமாறும், குறிப்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள், பார்சல் வாங்க வரும் பொழுது பாத்திரங்களோ அல்லது துணிகளால் ஆன பைகளை கொண்டுவருமாறும் பொது மக்கள் அறியும் வகையில் அறிவிப்புப்பலகை வைத்திடுமாறும், தவிர்க்க முடியாத பட்சத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் துணிகளால் ஆன பைகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பைகளில் 95 சதவிகிதம் பிளாஸ்டிக் கலந்திருப்பதால் மக்கும் தன்மை கிடையாது, ஆகையால் பொது மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதை பயன்படுத்த வேண்டாம் என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையர் ப.காந்திமதி, நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்கள் சீனிவாசன், விவேக் சீனிவாசன், நியூ ஆரிய பவன் ஹோட்டல் உரிமையாளர் பாலாஜி, சூரியா ஹோட்டல் உரிமையாளர் சுந்தர்ராஜன், சுப்பு மெஸ் உரிமையாளர் செந்தில்குமார், ஸ்ரீ ஆனந்தாஸ் ஹோட்டல் உரிமையாளர் வெங்கடேஷ், ஆர்.ஹெச்.ஆர் ஹோட்டல் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...