சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு



கோவை மாவட்டம், நீலிக்கோணாம்பாளையத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஜெயநாயகி (67). புதனன்று இரவு 9 மணியளவில் இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், ஜெயநாயகி கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயநாயகி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் திரண்டனர். அதற்குள், அந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார். இதுகுறித்து, ஜெயநாயகி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

அதேப்போல், கடந்த திங்கள்கிழமை டாடாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். மேலும், கோவையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சாலையில் நடந்து சென்ற 8 பேரிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...