தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

தொலைத்தொடர்புத்துறையில் திறமையான ஆட்களை உருவாக்கவும், பயிற்சி அளிக்கும் விதமாகவும் கோவையில் இதற்கான ஒரு மையத்தை ஏற்படுத்த தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கோவையில் திறன் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக, துவங்கப்படவுள்ள இந்த மையத்தில், தொலைத்தொடர்புத்துறை அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட்)தொழில்நுட்பம், ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு முறைகள், வலைத்தொடர்பு மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை திறன் மேம்பாடு, பழுதுநீக்கல் உள்ளிட்ட அணைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இந்த மையம் அரசின் நோக்கமான டிஜிட்டல் இண்டியா, மேக் இன் இண்டியா திட்டத்துக்கு உதவும் வகையில் பயிற்சி அளிக்கும். 



இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எஸ்.பி கோச்சர் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ருத்திரமூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.



பின்னர், பேசிய தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி:- தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, தொழில்துறையை அடையவும் அனைவரின் நோக்கமான திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாக கொண்டது. இவ்விரு நிறுவனங்களும், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்துவதோடு, மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு திறனை இளைஞர்களுக்கு அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தரும். நாடு முழுவதும் தொலைத்தொடர்புத்துறை திறனை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். எவரெஸ்ட் சிகரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க சிறப்பான பயிற்சியை இந்த மையம் அளிக்கும். அடுத்த இந்து ஆண்டுகளில் 8.67 மில்லியன் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சியை கொண்டு செல்ல ஆன் லைன் மற்றும் ஆப் லைன் முறையை கையாள உள்ளோம். அதிநவீன தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையிலும் தயார் நிலை பயிற்சியாக இம்மையம் இருக்கும் என அவர் கூறினார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...