தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

தொலைத்தொடர்புத்துறையில் திறமையான ஆட்களை உருவாக்கவும், பயிற்சி அளிக்கும் விதமாகவும் கோவையில் இதற்கான ஒரு மையத்தை ஏற்படுத்த தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கோவையில் திறன் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக, துவங்கப்படவுள்ள இந்த மையத்தில், தொலைத்தொடர்புத்துறை அகண்ட அலைவரிசை (பிராட் பேண்ட்)தொழில்நுட்பம், ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு முறைகள், வலைத்தொடர்பு மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை திறன் மேம்பாடு, பழுதுநீக்கல் உள்ளிட்ட அணைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இந்த மையம் அரசின் நோக்கமான டிஜிட்டல் இண்டியா, மேக் இன் இண்டியா திட்டத்துக்கு உதவும் வகையில் பயிற்சி அளிக்கும். 



இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எஸ்.பி கோச்சர் மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் ருத்திரமூர்த்தி ஆகியோர் கையெழுத்திட்டனர்.



பின்னர், பேசிய தொலைத்தொடர்புத்துறை திறன் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி:- தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, தொழில்துறையை அடையவும் அனைவரின் நோக்கமான திறன்மிக்க இந்தியாவை உருவாக்குவதை லட்சியமாக கொண்டது. இவ்விரு நிறுவனங்களும், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளை நடத்துவதோடு, மேம்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு திறனை இளைஞர்களுக்கு அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி தரும். நாடு முழுவதும் தொலைத்தொடர்புத்துறை திறனை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். எவரெஸ்ட் சிகரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க சிறப்பான பயிற்சியை இந்த மையம் அளிக்கும். அடுத்த இந்து ஆண்டுகளில் 8.67 மில்லியன் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கும் இப்பயிற்சியை கொண்டு செல்ல ஆன் லைன் மற்றும் ஆப் லைன் முறையை கையாள உள்ளோம். அதிநவீன தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையிலும் தயார் நிலை பயிற்சியாக இம்மையம் இருக்கும் என அவர் கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...