பழைய 500, 1000 ரூபாயில் மாநகராட்சி வரி- குவியும் பொதுமக்கள்


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கி, தபால் நிலையம் உள்ளிட்டவற்றில் மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கோவையில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை மக்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாயைக் கொண்டு நவம்பர் 11ம் தேதியன்று (இன்று) ஒரு நாள் வரி செலுத்தலாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் அறிவித்திருந்தார். 



அதனடிப்படையில், இன்று (வெள்ளி) ஏராளமான பொதுமக்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வரி செலுத்த குவிந்தனர். 

இதுகுறித்து, வரி செலுத்த வந்த பொதுமக்கள் கூறுகையில், 

மாநகராட்சி அலுவலகத்தில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டமாக வந்து வரிசையாக வரி செலுத்த காத்திருக்கின்றனர். மின்சார வரி, வீட்டுவரி உள்ளிட்டவற்றை செலுத்த வந்தோம். 500, 1000 ரூபாயினைக் கொண்டு இன்று மாநகராட்சியில் வரிசெலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் நேற்று மாலை நேரத்தில் அறிவித்துவிட்டு இன்று ஒரு நாள் மட்டும் அவகாசம் அளித்திருப்பது போதுமானது அல்ல. பலருக்கும் இதுகுறித்த தகவல் சென்றடையவில்லை.



இதனால், பலரும் வங்கி, தபால் நிலையத்தில் 500, 1000 ரூபாய்களை மாற்றிக் கொண்டு வந்து இங்கு காத்திருக்கின்றனர். முன்னதாகவே இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தால் இன்னும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். மேலும், வரியினைப் செழுத்த கூடுதல் வசதிகளை செய்ய வேண்டும்'' என்றனர்.



Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...