77-வது வார்டில் கொசு ஒழிப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெற்கு மண்டலம், 77-வது வார்டுக்குட்பட்ட சொக்கம்புதூர் பகுதியில் பொது மக்களுக்கு கொசு ஒழிப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்து தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளையும், சொக்கம்புதூர் மின் மயானத்தில் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மருத்துவமனையும், அங்குள்ள வரி செலுத்தும் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், கோவை மாநகராட்சி 77, 79 ஆகிய வார்டுக்குட்பட்ட பொன்னையராஜபுரத்தில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் வருகை பதிவை டிஜிட்டல் மயமாக்கும் விதமாக பயோமெட்ரிக் பயன்படுத்தும் முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை ஆய்வு செய்யும் விதமாக 86-வது வார்டு, செல்வபுரம் நகர்நல மருத்துவ மையத்தில் பணிபுரியும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதை க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.  

இதைத்தொடர்ந்து, மாநகராட்சியில் அனைத்து வரி செலுத்தும் இடங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செலுத்தி ரசீதுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்ததைத் தொடர்ந்து மேற்கு மண்டல அலுவலகத்திலுள்ள வரி செலுத்தும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) ரவி, உதவி ஆணையர் (வருவாய்) ரவிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...