ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாகக் கூறி பெண்ணிடம் நூதன மோசடி- வாலிபர் கைது


கோவை மாவட்டம், பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி ஜோதி (42) கடந்த மாதம் 22ம் தேதியன்று கிராஸ்கட் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராதநிலையில், அருகில் இருந்த இளைஞர் உதவுவதாகக் கூறி ஜோதியின் ஏடிஎம் அட்டையினை பயன்படுத்தி ஒரு தொகையினை எடுத்து கொடுத்துள்ளார். பின், ஜோதியின் ஏடிஎம் அட்டைக்கு பதிலாக தான் கொண்டுவந்திருந்த போலி ஏடிஎம் அட்டையினை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், ஜோதியின் கைபேசிக்கு ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் எடுத்திருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் வங்கிக்கு சென்று விசாரித்தபோது, அந்த நபர் போலி அட்டை கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக, காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த ஏடிஎம் அட்டை கடைசியாக பயன்படுத்தப்பட்ட பகுதியினைக் கொண்டு இந்த நூதனமோசடியில் ஈடுபட்டவரை பிடித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவரது பெயர் செந்தில்குமார் (32) என்பதும், ஆனைமலை அடுத்த தெற்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிவந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...