ரூ.40 ஆயிரம் கேட்டு இளைஞரைக் கடத்திய கும்பலை காவல்துறை கைதுசெய்து விசாரணை


கோவை மாவட்டம், பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். அதேப்பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் விஷ்ணு, அதேக் கல்லூரியில் உணவு விடுதியில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், வியாழனன்று மாலை பணி முடிந்து தனித்தனி வாகனத்தில் இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சண்முகம் வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், விஷ்ணு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனிடையே, மர்ம நபர்களிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர்கள், விஷ்ணுவை கடத்தியிருப்பதாகவும், 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் இல்லையென்றால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். அதற்கு நாளை அந்தப் பணத்தினை தந்துவிடுவதாக சண்முகம் கூறியுள்ளார். தொடர்ந்து, பீளமேடு காவல் துறையினருக்கும் ரகசியத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்று மர்ம கும்பல் கூறிய இடத்திற்கு சண்முகம் சென்றார். காவல் துறையினரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். காவலர்களைக் கண்ட மர்மகும்பல் விஷ்ணுவை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, விஷ்ணு கூறிய அடையாளம் மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் காவல் துறையினர் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோப் பதிவையும் சோதனையிட்டு வருகின்றனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...