சீனாவில் போலீஸ் உயர் அதிகாரிக்கு மரண தண்டனை

சீனாவில் இன்னர் மங்கோலியா பகுதியில் போலீஸ் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் ஜாவோ லிபிங்.

இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம், லி என்ற பெண்ணை கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து, பின்னர் உடலை எரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கொலை செய்யப்பட்ட பெண், அவரது மனைவி எனவும் கூறப்படுகிறது. ஜாவோ லிபிங்கின் ஊழலை அம்பலப்படுத்தி விடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டியதை தொடர்ந்துதான் இந்த கொலை நடந்திருக்கிறது.

மேலும் ஜாவோ லிபிங் ஊழல் செய்து 2 லட்சத்து 90 ஆயிரம் டாலர் சம்பாதித்ததாகவும், தனது அலுவலகத்தில் சட்ட விரோதமாக 91 டெட்டனேட்டர்களை பதுக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது ஷான்சி மாகாணத்தில் உள்ள டாய்யுவான் நகரில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, ஜாவோ லிபிங் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார்.

தொடர்ந்து விசாரணை நடந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.  

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...