செம்மர கடத்தலில் ஈடுபட்ட சென்னை பெண் வீட்டில் ரூ.50 கோடி நகை-பணம் பறிமுதல்


சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக சித்தூர் போலீசார் கைது செய்தனர்.

அவர், சித்தூர் மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து செம்மரங்களை கடத்தி சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்ததாக கூறினார்.

அவரை, சித்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடப்பா மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர், சிறையில் இருந்தபடியே 2-வது மனைவி சங்கீதா (32) மூலமாக சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபடுவது தெரிய வந்தது. சங்கீதாவை பிடிக்க சித்தூர் போலீசார் ஒரு சிறப்புக்குழுவை அமைத்தனர். அவர்கள் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சங்கீதாவை தேடினர்.

சங்கீதா, கொல்கத்தாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்தது. சித்தூர் சிறப்புப்படை போலீசார் கொல்கத்தா சென்று சங்கீதாவை பிடிக்க முயன்றனர். இதை அறிந்த சங்கீதா வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார்.

அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு ரூ.50 கோடிக்கும் மேலான தங்க நகைகள், கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சித்தூருக்குக் கொண்டு வந்தனர். சங்கீதாவுக்கு துணையாக லட்சுமணனின் தம்பி ரமேஷ் (36) தங்கியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

ரமேஷ் உதவியோடு சங்கீதா சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. தலைமறைவான சங்கீதா, ரமேஷ் ஆகியோரை சித்தூர் சிறப்புப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...