கோவையில் வந்தடைந்த டெல்லி இந்திய விமானப் படை கண்காட்சி வாகனம்.

இந்திய விமானப் படை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய விமானப் படை சார்பாக டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய விமானப் படை பற்றிய கண்காட்சி வாகனம் கோவைக்கு வந்தது. அதன் ஒருபகுதியாக இன்று ஜி.டி மெட்ரிக் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய விமானப்படை அதிகாரிகள் கலந்துரையாடினர்.
 



இது குறித்து, டெல்லி இந்திய விமானப் படை இணை இயக்குநர் பணியாளர்கள் அதிகாரி ஜோசப் கூறுகையில்:- 
இந்திய விமானப்படை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை சார்பில் ஒரு கண்காட்சி வாகனம் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்.  இந்த வாகனம் ஜெய்ப்பூர், குஜராத், புனே, பெங்களூர் போன்ற இடங்களில் சென்றும்  தற்போது கோயமுத்தூர் வந்தடைந்துள்ளது.



ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளோம். கோவையில் அமிர்த பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் கல்லூரி போன்ற கல்லூரி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தில் விமானப்படை சம்மந்தமான வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களும், விமானப்படையினர் உபயோகப்படுத்தும் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் விமானப்படையில் மாணவர்கள் சேர்வதற்கு இக்கண்காட்சி ஊக்கம் அளிக்கும் என அவர் கூறினார்.



Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...