கோவையில் வந்தடைந்த டெல்லி இந்திய விமானப் படை கண்காட்சி வாகனம்.

இந்திய விமானப் படை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய விமானப் படை சார்பாக டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்திய விமானப் படை பற்றிய கண்காட்சி வாகனம் கோவைக்கு வந்தது. அதன் ஒருபகுதியாக இன்று ஜி.டி மெட்ரிக் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய விமானப்படை அதிகாரிகள் கலந்துரையாடினர்.
 



இது குறித்து, டெல்லி இந்திய விமானப் படை இணை இயக்குநர் பணியாளர்கள் அதிகாரி ஜோசப் கூறுகையில்:- 
இந்திய விமானப்படை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை சார்பில் ஒரு கண்காட்சி வாகனம் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்.  இந்த வாகனம் ஜெய்ப்பூர், குஜராத், புனே, பெங்களூர் போன்ற இடங்களில் சென்றும்  தற்போது கோயமுத்தூர் வந்தடைந்துள்ளது.



ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளோம். கோவையில் அமிர்த பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் கல்லூரி போன்ற கல்லூரி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த வாகனத்தில் விமானப்படை சம்மந்தமான வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களும், விமானப்படையினர் உபயோகப்படுத்தும் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் விமானப்படையில் மாணவர்கள் சேர்வதற்கு இக்கண்காட்சி ஊக்கம் அளிக்கும் என அவர் கூறினார்.



Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...