உலக சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி இன்று உலக சக்கரை நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சக்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் உலக சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இப்பேரணியை கோவை மாவட்ட வருவாய்துறைத் தலைவர் கிருஸ்துராஜ் துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோ முன்னிலை வகித்தார். இதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிவிரைவுப் படையினர் கலந்து கொண்டனர். இப்பேரணி அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.



இது குறித்து நீரிழிவு துறைத் தலைவர் மருத்துவர் ஜெயப்ரகாஷ் கூறுகையில்:-

பொது மக்களுக்கு சக்கரை நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சக்கரை நோயை சரிசெய்ய செயற்கை இன்சூலின் மாத்திரை, இன்சூலினை ஊசி வடிவில் எடுத்து கொள்கிறார்கள். தினமும் 400க்கும் மேற்பட்ட சக்கரை நோயாளிகளுக்கு இலவசமாக சிகிக்சை அளிக்கப்படுகிறது.

மேலும் இலவச இன்சூலின் வழங்கப்படுகிறது. நோயாளியின் உடல் அமைப்புக்கு  ஏற்றவாறு இன்சூலின் உற்பத்தியை தூண்டும் உடற்பயிற்சி முறைகள் உள்ளன. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்க முடியும். தினமும் இரண்டு வேளை குறைந்தபட்சம் 30 நிமிட வேக நடைபயிற்சி, ஒருமணி நேர விளையாட்டு, நடந்து செல்வது போன்றவற்றை செய்வதன் மூலம் உடலில் சக்கரை நோய் வராமல் தடுக்கலாம் எனக் கூறினார்.



Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...