உலக சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி இன்று உலக சக்கரை நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சக்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் உலக சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இப்பேரணியை கோவை மாவட்ட வருவாய்துறைத் தலைவர் கிருஸ்துராஜ் துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோ முன்னிலை வகித்தார். இதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிவிரைவுப் படையினர் கலந்து கொண்டனர். இப்பேரணி அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.



இது குறித்து நீரிழிவு துறைத் தலைவர் மருத்துவர் ஜெயப்ரகாஷ் கூறுகையில்:-

பொது மக்களுக்கு சக்கரை நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சக்கரை நோயை சரிசெய்ய செயற்கை இன்சூலின் மாத்திரை, இன்சூலினை ஊசி வடிவில் எடுத்து கொள்கிறார்கள். தினமும் 400க்கும் மேற்பட்ட சக்கரை நோயாளிகளுக்கு இலவசமாக சிகிக்சை அளிக்கப்படுகிறது.

மேலும் இலவச இன்சூலின் வழங்கப்படுகிறது. நோயாளியின் உடல் அமைப்புக்கு  ஏற்றவாறு இன்சூலின் உற்பத்தியை தூண்டும் உடற்பயிற்சி முறைகள் உள்ளன. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்க முடியும். தினமும் இரண்டு வேளை குறைந்தபட்சம் 30 நிமிட வேக நடைபயிற்சி, ஒருமணி நேர விளையாட்டு, நடந்து செல்வது போன்றவற்றை செய்வதன் மூலம் உடலில் சக்கரை நோய் வராமல் தடுக்கலாம் எனக் கூறினார்.



Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...