மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கோவை தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பணம் வழங்காததால் கூட்டுறவு வங்கிகள் மேல் விவசாயிகளுக்கு உள்ள நம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.



தமிழக அரசு கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் இயங்கப்பட்டு வருகிறது, கோவை மாவட்டத்தை பொருத்தவரை 276 கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகளே அதிக பயனாளர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் மாநில அரசின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மத்திய வங்கியில் செலுத்திய பணத்தை மீண்டும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்திய விவசாயிகள் பணத்தை எடுக்க முடியாமலும், விவசாய நகை கடன், உள்ளிட்ட கடன்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு பெரிய தொகை வழங்க முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உடனடியாக கூட்டுறவு வங்கி செலுத்திய பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் கோவையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...