ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தடையினால், மக்கள் அவதி -ஜி.கே வாசன்

அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறையை தளர்த்த வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டதில் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் நவம்பர் 30 ம் தேதி வரை பழைய நோட்டுகள் செல்லாது என்ற விதிமுறைகளை தளர்த்த வேண்டுமெனவும், அப்படி செய்தால் மட்டுமே வணிகர்களும், சிறு தொழில் முனைவோர்களும் தங்களது வாழ்வதாரத்தை காப்பற்றி கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார். 

மேலும், ரயில் நிலையம், விமான நிலையம், தனியார் மருத்துவமனை, மருந்து கடை உள்ளிட்டவற்றில் அரசு உத்தரவுப்படி 500, 1000 ரூபாய் தாள்களை பெற்று கொள்ள வேண்டுமெனவும், அதனை பின்பற்றாதவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வெறும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை வைத்து சாதரண மக்கள் வாழ முடியாது எனவும், 2 ஆயிரம் ரூபாய் தாள்களுக்கு பதிலாக 500 தாள்களை அச்சிட்டு வெளியிட்டு இருந்தால் சாதரண மக்கள் பயன்பெற்று இருப்பார்கள் எனவும் ஜி.கே.வாசன் கூறினார். 

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தில் விரைவில் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று ஆட்சி பணிக்கு திரும்ப பெற வேண்டுமென்பதே தமது விருப்பமென அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...