கோவை: பள்ளி மாணவரை தாக்கிய ஆசிரியை - தந்தை போலீசில் புகார்


கோவையில் தனியார் பள்ளியில் மாணவனை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அதேபகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் கிஷோர் சித்தாப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் மேரி ராணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் யு.கே.ஜி பயின்று வருகிறார். 

இந்நிலையில் கடந்த வாரம் கிஷோர் பள்ளியில் உள்ள கழிவறையில் தண்ணீரை கொட்டியதற்காக அவரது வகுப்பு தமிழ் ஆசிரியை ஹன்சன்னி, கிஷோரை அடித்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த கிஷோருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது. இதையடுத்து கிஷோரின் தந்தை மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து காவல் துறையினர் பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவத்தையடுத்து கிஷோர் பள்ளிக்கு செல்ல பயப்படுவதாகவும், ஆசிரியை அடித்ததால் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் தந்தை மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சிறு மாணவ, மாணவிகளை இதுபோன்று கொடுமையாக தாக்கிய ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...