பள்ளி மாணவருக்கு பிரம்படி கொடுத்த ஆசிரியர் - அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை


கோவை ஆர்.எஸ்.புரத்தை அடுத்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு தரணிதரன் (13) என்ற மகன் உள்ளார். இவர், பூமார்க்கெட் பகுதியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில், திங்களன்று தரணிதரன் பள்ளியில் விளையாடிய போது அவரது கணித ஆசிரியர் சிவராஜ் பிரம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த தரணிதரன் இது குறித்து பெற்றோரிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், அழுதபடி உறங்கினார். இதைத்தொடர்ந்து, செவ்வாயன்று (இன்று) காலையும் அதேபோல் சிவராஜ் தரணிதரனை பிரம்பால் அடிக்கவே அவர் தனது பெற்றோரிடம் புகார் அளித்தார். 



இதைத்தொடர்ந்து பள்ளிக்கு வந்த பெற்றோர் தரணிதரனை அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இதுகுறித்து மாணவரின் தந்தை கூறுகையில், என் மகனை கணித ஆசிரியர் சிவராஜ் தாக்கியதாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் மீதும், எனது மகனை தாக்கி ஆசிரியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் கொடுக்க விருப்பம் இல்லை என்று கூறிய பெற்றோர், அம்மாணவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...