20 லட்சம் டாலர் லஞ்சம்: ரஷியா நாட்டின் நிதி மந்திரி கைது

ரஷியா நாட்டு மைய அரசுக்கு சொந்தமான ரோஸ்னெப்ட் என்ற பெட்ரோலிய நிறுவனம், பஷ்கோர்ட்டோஸ்தான் குடியரசில் இயங்கிவரும் பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான 50 சதவீதம் பங்குகளை வாங்க தீர்மானித்தது.

இந்த பங்குகளை வாங்குவது தொடர்பான சாதக - பாதகங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரஷிய நாட்டின் நிதித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, ஆய்வு நடத்தியபோது பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்தின் பாதகமான அம்சங்களை மறைத்து, சாதகமான அம்சங்களை சற்று தூக்கலாக காட்டி அறிக்கை தயாரிப்பதற்காக 20 லட்சம் டாலர்களை லஞ்சமாக தர வேண்டும் என ரஷிய நாட்டின் நிதித்துறை மந்திரியான அலெக்சி உல்யுக்காயேவ் என்பவர் பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நிறுவனமும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான 50 சதவீதம் பங்குகளை ரோஸ்னெப்ட் நிறுவனம் 500 கோடி டாலர்களுக்கு வாங்கியது.

இந்த ஊழலுக்காக பேஷ்னெஃப்ட் பெட்ரோலிய நிறுவனத்திடம் இருந்து 20 லட்சம் டாலர்களை லஞ்சமாக வாங்கியபோது நிதித்துறை மந்திரி அலெக்சி உல்யுக்காயேவ்-வை ரஷிய நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

பல ஆண்டுகளாக ரஷியா நாட்டின் மத்திய வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்துவந்த அலெக்சி உல்யுக்காயேவ் கடந்த 2013-ம் ஆண்டு அந்நாட்டின் நிதி மந்திரியாக பதவியேற்றார். தற்போது, 20 லட்சம் டாலர்களை லஞ்சமாக வாங்கியதாக பிடிபட்டுள்ள இவர்மீது விரைவில் வழக்கு தொடர அரசு தீர்மானித்துள்ளது.

வழக்கின் விசாரணையில் அலெக்சி உல்யுக்காயேவ் மீதான குற்றம் நிரூபணமானால் 8 முதல் 15 ஆண்டுகள்வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...