சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த மேலும் ஒரு நகரம் மீட்பு

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் அலெப்போ நகரை ஒட்டி, அல் பாப் பகுதியில் குவாபாசிப் என்னும் சிரியாவுக்கு சொந்தமான நகரத்தை கைப்பற்றி இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கிருந்தவாறு துருக்கி நாட்டிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வந்தனர்.

இந்த நகரத்தை மீட்பதற்காகவும், ஐ.எஸ். தீவிரவாதிகளை இங்கிருந்து விரட்டுவதற்காகவும் சிரியாவில் உள்ள அஹ்ரார் அல் ஷாம் உள்ளிட்ட உள்நாட்டு குர்திஷ் இனப்போராளிக் குழுக்கள் சமீபத்தில் அதிரடி தாக்குதலை தொடங்கின. துருக்கி ராணுவமும் அவர்களுக்கு துணையாக இருந்தது.

இந்த கூட்டுப்படையினர் நேற்று பின்னிரவு, அல் பாப் பகுதியை ஒட்டியுள்ள குவாபாசிப் நகரத்தை கைப்பற்றி விட்டதாகவும், அல் பாப் பிராந்தியம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் இந்தப் படைகள் முன்னேறி வருவதாகவும், இங்கு முகாமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் புறமுதுகிட்டு ஓடிவிட்டதாகவும் சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...