கணைய அழற்சி சிகிச்சையில் ஜெம் மருத்துவமனை சாதனை

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (22). பி.இ. கணினி அறிவியல் பட்டதாரியான இவருக்கு கணையத்தில் அழற்சி ஏற்பட்டு நாமக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு கோவையில் செயல்படும் ஜெம் மருத்துவமனையில் கணைய கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலைமை மருத்துவர் பழனிவேலு தலைமையில் மருத்துவர்கள் கான், ரமேஷ், திவாகர் ஆகியோர் சிகிச்சை மேற்கொண்டனர்.

மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பின் அறுவை சிகிச்சை எதுவுமின்றி மருந்துகள் மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டுதலின் படி தற்போது அவர் நல்ல முறையில் உடல் நலம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து, ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சி.பழனிவேலு கூறுகையில், ''பித்தப்பை கற்களின் தூண்டுதலால் தான் கணையம் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மது அருந்துதல், வைரஸ் கிருமிகள் காரணமாக கணையம் பாதிக்கப்பட்டு வருகிறது. உரிய தருணத்தில் சரியான சிகிச்சை அளித்தால் கணைய அழற்சியில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி விடலாம்'' என்றார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...