இந்திய மருத்துவர் சங்கத்தை கலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

இந்திய மருத்துவர் சங்கத்தை கலைத்து தேசிய மருத்துவர் சங்கத்தை உருவாக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் இந்திய மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவர் சங்கத்தை கலைக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய மருத்துவர் சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகம் முன்பாக அவ்வமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட இந்திய மருத்துவ சங்கத்தை கலைத்து, தேசிய மருத்துவச் சங்கத்தை உருவாக்க மத்திய அரசு முயல்வதாகவும், அவ்வமைப்பில் 20 உறுப்பினர்களில் 15 பேரை நியமன முறையில் மருத்துவர் அல்லாதவர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதிகரித்து வரும் மருத்துவர்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், இந்திய மருத்துவ சங்கத்தை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...