காபூலில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நடந்த தற்கொலைப்படையினர் நடத்திய மோட்டார் வாகன குண்டுவெடிப்பு சம்பவத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் புலி மெஹ்மூத் கான் பகுதியில் உள்ள ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகத்தின் வளாகத்தில் நடந்ததாக ஆப்கன் பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 4 பேர் பலியானதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் குண்டூஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த தலிபான் முகாம்கள் மீது அமெரிக்க விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குண்டூஸ் மாகாணத்தின் மஸார்-இ-ஷெரீஃப் நகரில் உள்ள ஜெர்மன் தூதரகம் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய சரக்கு வாகனத்தை மோதச் செய்து தலிபான் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...