முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர் கேஎம்சிஎச் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டார்

கோவையில் செயல்பட்டு வரும் கேஎம்சிஎச் மருத்துவமனையில் குமாரசாமி (50) என்பவர் கடும் முதுகு வலியின் காரணமாக கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த இருதய மருத்துவர் ஆர்.சுரேஷ் குமார், குமாரசாமியின் இருதயத்திலிருந்து வெளிவரும் இரத்தக் குழாயில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற பரிசோதனையில், அந்த விரிசல் மூளை, கல்லீரல், இடது சிறுநீரகம் மற்றும் குடலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் வரை பரவி இருப்பதும், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவது உறுதி என கேஎம்சிஎச் இருதய- நுரையீரல் அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் பிரசாந்த் வைஜயநாத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து குமாரசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நலம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற 10 அறுவை சிகிச்சைகள் நூறு சதவிகிதம் வெற்றியுடன் செய்யப்பட்டுள்ளன என்று கேம்எம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்லா ஜி.பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...