தண்ணீரை தேடி வந்த புள்ளி மான் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் மற்றும் புள்ளி மான்கள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக தண்ணீரினைத் தேடி வன விலங்குகள் வனப்பகுதியினை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் நுழைந்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் பெத்திகுட்டையை அடுத்த ஓதிமலை காரனூரில் செவ்வாயன்று இரவு இரண்டு புள்ளி மான்கள் தண்ணீரை தேடி முத்துசாமி என்பவரது தோட்டத்தினுள் புகுந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 100 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.



பின்னர், காலையில் விவசாய பணிக்காக சென்ற விவசாயி கிணற்றின் உள்ளே மான்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மான்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், அதில் ஒரு புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், உயிரோடு இருந்த மற்றொரு மானை மீட்ட வனத்துறையினர் ஓதிமலை காட்டு பகுதியில் பத்திரமாக விட்டனர்.

வனவிலங்குகள் தண்ணீரினை தேடி கிராம பகுதிகளில் நுழைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறுமுகை வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகளை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...