மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் பாதையில் ஆள் இல்லாத ரயில்வே கேட்டை மூட ரூ.2 கோடியில் ஒரே நாளில் சுரங்கப்பாலம்


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மலை ரயில் சேவை இயக்கபட்டு வருகிறது. இந்த ரயில் தடத்தினை ஒட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு வரை 20க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல மேம்பாலங்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் தங்களின் ஊர்களுக்கு செல்ல ரயில் தண்டவாளத்தை கடந்தே செல்ல வேண்டி இருந்தது. 

இந்த நிலையில் அகில இந்திய அளவில் ஆட்கள் இல்லாத ரயில்வே கேட்டுகளை ரயில்வே நிர்வாகம் மூடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு இடையே ஊட்டி ரயில் பாதையில் இரண்டு ஆட்கள் இல்லாத ரயில்வே கேட்டுகளை மூட திட்டமிட்டிருந்தது. 

இதனையொட்டி பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூரினை கருத்தில் கொண்டு சுமார் 2 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில்வே சுரங்க பாலம் அமைக்க முடிவு செய்யபட்டது. முதலில் பிளாக் தண்டர் அருகே உள்ள ஆட்கள் இல்லாத ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் புதனன்று (இன்று) துவங்கின.

இன்று காலை வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்ற பின் சிறிது நேரத்தில் தண்டவாளத்தை தனியாக பிரித்து எடுத்தனர். நான்கு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ரயில் பாதையின் குறுக்கே பெரிய பள்ளம் தோண்டி தரையில் கான்கிரிட் சிலாப்புகள் பதிக்கப்பட்டன. 

அதன் மீது 12 அடி நீளத்துக்கு நாலரை மீட்டர் அகலம், உயரத்தில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த சிமென்ட் கான்கிரிட் சுரங்கப்பாலத்தை பதித்து 5 மணி நேரத்தில் சுரங்கபாதை அமைக்கும் பணியினை முடித்தனர்.

இந்த பணிக்காக பெங்களூரிலிருந்து 400 டன் எடைகள் துாக்கும் ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அதன் பின் மண்ணை கொட்டி சமம் செய்து அதன் மீது ரயில் தண்டவாளத்தை அமைத்தனர். ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. 

ரயில் தடத்தில் போக்குவரத்தினை நிறுத்தாமல் அதுவும் ஒரே நாளில் பாலத்தை அமைத்த நிகழ்வு மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றதை பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்தனர். மாலையில் உதகையில் இருந்து வந்த மலை ரயில் எவ்வித பாதிப்பும் இன்றி வந்து சேர்ந்தது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...