தடை செய்யப்பட்ட நோட்டுகள் குறித்து கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!


புழக்கத்தில் உள்ள ரூ. 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 31 ஆம்தேதிவரை மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்த 8 ஆம்தேதி இரவு திடீரென ரூ500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. இதனையடுத்து  சிறுகுறு தொழில்கள் மற்றும் வியாபாரம் ஆகியவை முடங்கின. அமைப்பு சார தொழிலாளர்கள் மாதந்திர, வாரந்திர கூலியை பெற முடியாத சூழல் உருவானது. மேலும்  கடந்த ஒரு வார காலமாக அனைத்து வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று சிறிய தொகையை எடுப்பதற்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்  போராட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்தது.

இதன் ஒருபகுதியாக கோவை பவர்ஹவுஸ் முன்பு சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மோடி அரசு வெளிநாட்டில் பதுக்கியுள்ள பணத்தை பிடிக்க திறன் இல்லாமல், கார்ப்ரேட்டுகளின் நலனுக்காக உழைப்பாளி மக்களின் பணத்தை பிடுங்குவதாகவும் குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.பி பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருப்பு பணத்தை பிடிக்கிறேன் என்று சொல்லி அனைத்து தரப்பு மக்களின் அன்றாட செலவு பணத்தை பிடுங்கும் மோடி மறுபுறம் விஜய் மல்லையா உள்ளிட்ட கார்ப்ரேட் நிறுவனங்கள் வங்கியில் வாங்கியுள்ள 43 ஆயிரம் கோடி ரூபாயை தற்போது தள்ளுபடி செய்துள்ளது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மோடியினால் ஒரு போதும் கருப்பு பணத்தை மீட்க முடியாது. மாறாக உழைப்பாளி மக்களின் பணத்தை மட்டும்தான் பறிக்க முடியும் என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...