சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த பேருந்துக்கு முறையான ஆவணம் இல்லாததால் பேருந்து சிறைபிடிப்பு

கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுலா செல்வதற்காக கேரளா சொகுசு பேருந்தை ஏற்பாடு செய்த நிலையில் வரி செலுத்தாதல், உரிய ஆவணங்கள் இல்லை என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீரென அப்பேருந்தை சிறை பிடித்தனர். இதனால், சுற்றுலா செல்ல ஆவலுடன் பேருந்தில் இருந்த மாணவர்கள் இரவு முழுவதும் சாலையில் காத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் உள்ளது கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இன்ப சுற்றுலா பயணம் என சுமார் 80 பேரிடம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளனர். 

சுற்றுலாவிற்காக கேரளாவுக்கு உட்பட்ட பாலக்காட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேருந்தை கல்லூரி நிர்வாகத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, புதனன்று இரவு 15 நாட்கள் சுற்றுலா என இரு கேரளா சொகுசு பேருந்துகள் கல்லூரிக்கு வந்ததையடுத்து  காத்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆவலுடன் ஏறியுள்ளனர். 

இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக வந்த வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேருந்தின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் இதுவரை முறையான ஆவணங்கள், பர்மிட் பணம் எதுவும் செலுத்தவில்லை என்று பேருந்தை சிறைபிடித்ததையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சுற்றுலா போகிறோம் என்ற கனவில் இருந்த மாணவ மாணவிகள் பேருந்து இல்லை என்ற ஏக்கத்தில் கவலை அடைந்து சோகத்துடனே காணப்பட்டனர். 

தமிழக- கேரளா எல்லையான எட்டிமடை உள்ளிட்ட பல பகுதியில் கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை கொட்டி வரும் நிலையில் தற்போது முறையான ஆவணங்கள் இன்றி சொகுசு பேருந்துகளையும் இயக்கி வருவது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...