வெப்ப மண்டல தாவர உயிரிகளின் நிலையான பயன்பாடு குறித்து சர்வதேச மாநாடு

அதிகரித்து வரும் ஆற்றல் தேவை மற்றும் படிம எரிபொருட்களின் வேகமான மறைவின் காரணமாக நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் இருந்து ஆற்றல் அபிவிருத்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

இவற்றை அடிப்படையாகக் கொண்டு வெப்ப மண்டல தாவர உயிரிகளின் நிலையான பயன்பாடு உயிரி செயலூக்கி, உயிரி தயாரிப்பு மற்றும் உயிரி சுத்திகரிப்பு என்னும் சர்வதேச மாநாடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வியாழன் (இன்று) மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ரேடிசான் புளு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கு.ராமசாமி, அமைப்புச் செயலாளர் முனைவர் உ.சிவகுமார் ஆகியோர் தலைமைதாங்க உள்ளனர்.

இந்த மாநாடானது, சர்வதேச   மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களைக் கொண்ட அறிவியல் பூர்வமான மன்றத்தினை வழங்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



மாநாட்டின் ஆய்வுப் பகுதிகளாக உயிரி மற்றும் செல்முறை பொறியியல், உயிரி செயலூக்கி மற்றும் தீவிர நொதி, நொதித்தல் மற்றும் வளர்சிதை மாற்ற பொறியியல் மற்றும் உயிரித் தயாரிப்பு உணவு மற்றும் மருந்து ஆகியவை உள்ளன.

இதில், உலக அளவில் 400 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தியா, ஸ்ரீலங்கா, ரஷ்யா, ஸ்வீடன், அயர்லாந்து மற்றும ஐக்கிய நாடுகளிலிருந்து வரும் பேச்சாளர்கள் வெப்ப மண்டல உயிரிகளின் பயன்பாட்டில் உள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்து பேசவுள்ளனர். 



இந்த சர்வதேச மாநாடானது கல்லூரி, பல்கலைக் கழகம், ஆய்வு நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் இளைய மற்றும் திறமை மிகுந்த ஆய்வாளர்கள் பங்களிப்பதையும், தொடர்புகொள்வதையும் ஊக்குவிக்கிறது.




Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...