ரயில் பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிப்பு

ரயிலில் பயணச் சீட்டு பரிசோதகரை பல நேரங்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பயணிகள் தரப்பில் இருந்து தெற்கு ரயில்வேக்கு புகார் வந்தது. இதனையடுத்து பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயிலில் உயர் வகுப்புகள் அதாவது ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவர்கள் பயணச் சீட்டு பரிசோதகர்களை ரயில் புறப்படும் 1 மணி நேரத்துக்கு முன்பாகவே நடைமேடையிலேயே தொடர்பு கொள்ளலாம்.

படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பாகவே பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ளலாம்.


இதைத் தொடர்ந்து, உயர் வகுப்பு ரயில் பெட்டி பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பாகவும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 15 நிமிடம் முன்பாகவும் பயணச் சீட்டு பரிசோதகரை ரயிலிலேயே இனி எளிதில் அனுகலாம்.

அப்படியும் பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் உதவி எண்ணை அழைக்கலாம்:


தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு : 044-25350308
ஹெல்ப் லைன் : 138
சென்னை கோட்டம் : 044-25354457, 9003061977
திருவனந்தபுரம் : 0471-2326484, 9567869375
சேலம் : 0427-2431010, 9600956230
பாலக்காடு : 0491-2552755, 9746763956
மதுரை : 0452-2308250, 9003862961
திருச்சி : 0431-2418992, 9003864966
தலைமை அலுவலகம், வர்த்தகப் பிரிவு
சிறப்பு அதிகாரி : 044-25354405

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...