பணம் வராத ஏடிஎம் மையத்திற்கு மலர் வளையம் வைத்து மாதர் சங்கம் நூதன போராட்டம்

கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பணம் வராத ஏடிஎம் மையங்களுக்கு மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன முறையில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.



மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்த 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் செல்லாது என திடீரென அறிவித்தது. இதனையடுத்து அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக, பெண்கள் மளிகை பொருட்களை வாங்க முடியாமலும், அன்றாட வரவு, செலவுகளை செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை மாற்ற குவிந்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் பெரும் ஏமாற்றத்தை அனுபவித்து வருகின்றனர்.



மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து பணம் வராத ஏடிஎம் மையங்களுக்கு மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் மாதர் சங்கத்தினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பணம் வராத ஏடிஎம் மையத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாதர் சங்கத்தினர், பருப்பு வாங்க காசில்லை, பால் வாங்க காசில்லாம மத்திய அரசு செய்து விட்டதே என்று ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்.அமிர்தம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிலட்சுமி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட ஏராளமான மாதர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாதர் சங்கத்தினரின் இந்த நூதனப் போராட்டத்தில் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...