குஜராத்தில் ரூ.2.5 லட்சம் லஞ்ச தொகை ரூ.2 ஆயிரம் தாள்களாக பிடிபட்டதால் பரபரப்பு, இருவர் கைது

பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பையடுத்து நாடு முழுவதும் ரூபாய் தாள்களை மாற்ற மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், குஜராத்தில் உள்ள இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். ஆனால், இதில் விநோதம் என்னவெனில் லஞ்சப்பணம் அனைத்தும் புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் என்பது கவனிக்கத்தக்கது.

நவம்பர் 11 ஆம் தேதி முதல் புதிய ரூ.2 ஆயிரம் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தாள்கள் இன்னும் புழக்கத்தில் போதிய அளவில் வாராததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், லஞ்சப்பணமாக இவ்வளவு தொகையில் புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் கிடைத்தது சோதனையிடச்சென்ற அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குஜராத்தில் உள்ள கண்டாலா துறைமுகத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் பி ஸ்ரீவிவாசு மற்றும் கே கோமேட்கர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைதுக்குள்ளான அதிகாரிகள் ஆவர்.  இவர்கள் 4.4 லட்சம் தொகைக்கான நிலுவை பில் தொகையை மாற்றுவதற்காக தனியார் மின்னனு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளனர். இதையடுத்து குஜராத் ஊழல் தடுப்பு பிரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீனிவாசுவின் வீட்டில் இருந்து மேலும் ரூ. 40 ஆயிரம் தொகையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். புதிய ரூபாய் தாள்கள் லஞ்சப்பணமாக கிடைத்தது எப்படி என்பது பற்றி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...