அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட போவதில்லை: இந்திய அமெரிக்கர் நிக்கி ஹாலே அறிவிப்பு

அமெரிக்க துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்டு டிரம்பிற்கு ஆதரவளிப்பேன் என்றும் தெற்கு கரோலினா மாகாணத்தின் குடியரசு கட்சி ஆளுநர் நிக்கி ஹாலே கூறியுள்ளார்.

இந்திய அமெரிக்கரான ஹாலே கூறும்பொழுது, மக்களின் நம்பிக்கை மீது மிக பெரிய மதிப்பு வைத்துள்ளேன்.  அதனை நான் எப்பொழுதும் கூறி வந்துள்ளேன்.  ஜனாதிபதிக்கான குடியரசு கட்சி வேட்பாளரை நான் ஆதரிப்பேன் என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவதால் நவம்பர் 8-ந் தேதி புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், மாகாணங்களில் நடந்து வருகின்றன.

இண்டியானா மாகாணத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரு கட்சிகளிலும் வேட்பாளர் தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் (வயது 69) அமோக வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து இந்த தேர்தலில் தோல்வி அடைந்த டெட் குரூஸ் போட்டியில் இருந்து விலகினார்.  இதனால் டிரம்ப் உத்தேச வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.  இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ஜான் காசிக் விலகியதை அடுத்து டிரம்ப் அதிகாரபூர்வ வேட்பாளராகியுள்ளார்.  வருகிற ஜூலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்படுவார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...