ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன பேராசிரியர்களின் ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய பல்கலைக் கழக மானியக் குழு

பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி), கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் 5 பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி நிதி உதவியினை வழங்கி தாங்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உதவியுள்ளது.

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்படும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்று பேராசிரியர்கள் ஆர்.சௌந்திரராஜன், சுஜரிதா மற்றும் பிரபா ஆகியோர் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்பித்ததற்கு பல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல் அளித்தது. மேலும் அந்த ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொள்ள ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரம், 2 லட்சம், 95 ஆயிரம் என முறையே வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதே வளாகத்தில் செயல்பட்டு வரும் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் பிரசன்னாவிற்கு 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஆராய்ச்சி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கோவைப்புதூரில் இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பொறியியல் துறை பேராசிரியர் சுந்தர்ராஜூக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆராய்ச்சியினை தொடர பல்கலைக் கழக மானியக் குழு வழங்கியுள்ளது.

இக்கல்விக் குழுமங்களின் பேராசிரியர்கள் மொத்தம் 11 லட்சத்திற்கும் மேல் ஆராய்ச்சி நிதியினைப் பெற்று பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

இவர்களை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், இக்கல்விக் குழுமங்களின் முதல்வர்கள் ஜே.ஜேனட், ஏ.ரமேஷ், பி.பாபாஞானகுமார், துறைத் தலைவர்கள் ஆசோக்வர்த்தன், ஜெகதீஸ்குமார், நடராஜன், சுமதி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து ஆராய்ச்சியினை மேற்கொள்ள ஊக்கப்படுத்தினர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...