கோவை மாநகராட்சியும் அறம் அறக்கட்டளையும் இணைந்து குழந்தைகள் உதவி மைய அலுவலகம் துவக்கம்

கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ஸ்மார்ட் ஸ்கூல்ஸ் திட்ட மையத்தின் அலுவலக திறப்பு விழா மாநகராட்சி ஆணையர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் வியாழனன்று (இன்று) ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

குழந்தைகள் உதவி மையம்:-

கோவை மாநகராட்சியின் சார்பில் குழந்தைகள் உதவி சேவை எண் 81900 00300 செயல்பட்டு வருகிறது. இதற்கான உதவி மையத்தை அறம் பொதுநல அறக்கட்டளையின் குழு நிர்வகிக்கும். அந்த குழுவில் மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், சமூக சேவகர்கள் மற்றும் கல்வியாளர்கள் இம்மையத்திற்கு வரும் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு ஏற்ப ஆலோசனைகளும் மற்றும் தீர்வுகளை நோக்கிய வழிமுறைகளும் இலவசமாக பரிந்துரைப்பார்கள்.

கோவை மாநகராட்சி பள்ளியில் இந்த மையம் செயல்படுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.



ஸ்மார்ட் ஸ்கூல்ஸ் திட்ட மையம்:-

கோவை ஸ்மார்ட் நகரம் ஆவதால் கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து கணேசபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 

இப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள், நவீன கற்பிக்கும் முறைகள், சிறந்த பள்ளிவளாக கட்டமைப்பு வசதிகள், பசுமை வளாக திட்டங்கள், காய்கறி மற்றும் பூந்தோட்டம், ஆரோக்கியமான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், அறம் பொதுநல அறக்கட்டளையின் பல்வேறு சமூகநல  பணிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ''ஹாப்பி சைல்ட் மற்றும் ஸ்மார்ட் ஸ்கூல்'' வெற்றி படி திட்டங்கள் நாட்டின் சிறந்த 100 திட்டங்களில் skoch award'' பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...