பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற கோவை மாநகராட்சி நடவடிக்கை!


கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற கூட்டரங்கில் கடை உரிமையாளர்கள் பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிகளால் ஆனா பைகள் உபயோகிப்பதாக  உறுதியளித்தனர். உறுதியளித்த முதல் 100 கடைகளின் பெயர்களை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டு, கடை உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.



பின்னர், பேசிய அவர்:-

கோவையில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலத்தீன் பைகள் பெருகி வருவதால், சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.  இதை தடுத்திடும் வகையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து கோவையிலுள்ள கடை உரிமையாளர்கள் தானாகவே முன்வந்து பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிகளால் ஆன பைகள் உபையோகிப்பதாக உறுதியளித்தனர். இதுபோன்ற கடைகளுக்கு உரிய அங்கீகாரமும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலும், பாலத்தீன் பைகள் உயிர்களுக்கும், பூமிக்கும் பெரும் கேடுகளை உருவாக்குகிறது. குறிப்பாக பாலித்தீன் பைகள் மக்குவதில்லை. இதனால் மழைநீர்  மண்ணுக்கு செல்லாமல், நிலத்தடி நீரும் பாதிக்கிறது. இதுபோன்ற கேடுகளை தவிர்க்க பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது துணிகளால் ஆனா, பைகளை எடுத்து செல்லவும், இதன்மூலம் கோவை நகரம் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற முடியும் என கூறினார்.

இதில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

Newsletter

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...