வாகன நிறுத்துமிடம், கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூல்- அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட எம்டிபி ரோடு புதிய பேருந்து நிலையத்திலுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தைகைதாரர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர் ஆகியோர் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட எம்டிபி ரோடு புதிய பேருந்து நிலையத்திலுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் செப்டம்பர் 7 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, வாகன கட்டணம் விபரப் பெயர் பலகை வைக்கப்படாதது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பெயர் பலகை வைக்கும் படி அறிவுத்தப்பட்டது.

மேலும், நவ. 15 ம் தேதியன்று ஆய்வு செய்யப்பட்ட போதிலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் கட்டண பெயர் பலகை வைக்கப்படவில்லை. 

மேலும், அதிக கட்டணம் வசூல் செய்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன குத்தைகைதாரர் சாந்தகுமார் என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அபராதமாக ரூ.20 ஆயிரம், நவீன கட்டண கழிப்பிடத்தின் குத்தைகைதாரர் ஜமேஷா என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இது போன்ற தவறுகள் தொடரப்பட்டால் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்களுடைய பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதுடன், செலுத்திய தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி நிதியில் சேர்க்கப்பட்டும் என்றும் அந்த இடத்தின பொது மின் ஏலத்தில் விடப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...