சிரியாவில் ரஷ்ய வான் வழி தாக்குதலில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி மீட்பு

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசின் ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் படை அமைத்து போரிட்டு வருகின்றனர்.

சிரியாவின் முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்கள்  தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மற்றும் ரஷ்யா படைகள் களத்தில் இறங்கின.

ஆனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே சுமூக தீர்வு எட்டப்படாததால் அலெப்போ நகரை காப்பாற்ற இரு அரசு படைகளும் நுழைந்தன.அரசு படை தாக்குதலில்  பொது மக்கள் 54 பேர் கொல்லபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக ரஷ்யா நேற்று அலெப்போ நகரில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ரஷ்யா நடத்திய தாக்குதலின் விளைவாக கதிஜா என்ற சிறுமி  வீட்டின் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பான வீடியோவையும் அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதில் காதிஜா அவருடைய வீட்டின் இடுபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டுள்ளார். இதைக் கண்ட பாதுகாப்பு படையினர் முதலில் அச்சிறுமியின் தலையில் ஹெல்மெட்டை வைத்தனர்.

அதன் பின்னர் பொறுமையாக இடுபாடுகளுக்கு மத்தியில் இருந்த அவரை மீட்டு அவசர அவசரமாக முதலுதவி கொடுப்பதற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது அச்சிறுமி வலி தாங்க முடியாமல் அழுவதும், மூக்கு மற்றும் வாய்பகுதியில் இரத்தம் வழிந்ததால் பதற்றமடைந்த பாதுகாப்பு படை வீரர் மருத்துவரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்தார்.

தற்போது கதிஜா நன்றாக உள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும், சிரியாவின் கிழக்கு பகுதியில் இதுவரை நடத்திய தாக்குதலின் விளைவாக 87 பேர் இறந்துள்ளனர். அதில் 4 குழந்தைகளும் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...