விஜய் மல்லையாவுக்கு கடன் தள்ளுபடி செய்த எஸ்பிஐ வங்கியைப் பாராட்டி சமூக நீதிக்கட்சி நூதன போராட்டம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட 63 பெருங்கோடீஸ்வர பண முதலைகளின் சுமார் ரூ.7,016 கோடியை தள்ளுபடி செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து மக்களை வஞ்சித்து வரும் இந்நிலையில், பண முதலைகளின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்யும் விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயக் கடன், ஏழை மாணவர் கல்விக் கடன் என சாதாரண ஏழை, எளிய மக்கள் பெற்றுள்ள வங்கிக் கடனில் சிறிதும் சலுகையின்றி கடுமையான வசூலில் ஈடுபடும் வங்கிகள், விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு வழங்கியுள்ள கடன் தள்ளுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே கண்டனப் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சமூக நீதிக் கட்சியின் சார்பாக ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்யை ஏமாற்றிய ஏழை விஜய் மல்லையாவின் கடன் தள்ளுபடியைப் பாராட்டி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தின் பொது மேலாளரிடம் மலர் கொத்து வழங்கி நூதன முறையில் கண்டனத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு சென்ற சமூக நீதிக் கட்சியினரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவர்களை கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...