கேரளாவில் தெருநாய்களுக்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

கேரளாவில் தெருநாய்களுக்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் தெருநாய்களின் தொல்லையானது அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்கள் கடித்து அவ்வபோது உயிரிழப்பு சம்பவமும் நேரிட்டு வருகிறது. கிராம புறங்களிலும் அதிகமான நாய்கள் திரிகிறது, இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சிகளும், உள்ளூர் மக்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தெருநாய்கள் பிடித்துக் கொல்லப்பட்டு வருகிறது. தெருநாய்களின் தொல்லை தாங்க முடியாமல் கொல்லப்பட்டு வருகிறது. மறுபுறம் கொலை செய்யப்படுவதற்கு விலங்குகள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது என நீண்டுக்கொண்டு உள்ளது பிரச்சனை.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது. கண்காணிப்புக் குழுக்களிடம் நாய்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்நிலையில் தெருநாய்களினால் மாநிலத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு நேரிட்டு உள்ளது.

கந்தன்கோடு மேம்பரம்பாது பகுதியை சேர்ந்த ஹரிதாசன் என்பவரது 15 வயது மகள் கிரிஸ்மா இன்று காலை கடைக்கு பால் வாங்க சென்று உள்ளார். பால் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது தெருநாய்கள் மொத்தமாக நின்று உள்ளன. மொத்தமாக நின்ற தெருநாய்கள் கிரிஸ்மாவை நோக்கி பாய்ந்து உள்ளது. நாய்கள் மொத்தமாக வருவதை பார்த்து மிரண்ட கிரிஸ்மா பயந்து ஓட தொடங்கிவிட்டார். பயந்து ஓடிய கிரிஸ்மா தடுப்பு சுவர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துவிட்டார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டனர். அவருடைய சடலமானது கண்ணம்குளம் தாலுகா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Newsletter

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...