கோவை புகழ் '20 ரூபாய் டாக்டர்' காலமானார்!


கோவை ஆவாரம்பாளையம் சாலையில் கிளினிக் நடத்தி வந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம்.  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிளினிக் நடத்தி வந்தார். மருத்துவம் பார்க்க தன்னிடம் வரும் ஏழை, எளிய மக்களிடம் கட்டணமாக வெறும் 20 ரூபாய் மட்டுமே வசூல் செய்வதால் இவரை ஆவாரம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ”20 ரூபாய் டாக்டர்” என்றே மக்கள் இவரை அழைப்பார்கள். நேற்று காலை மருத்துவர் பாலசுப்பிரமணியம் மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் இவரது கிளினிக்கு மருத்துவம் பார்க்க வந்த ஏழை, எளிய மக்கள் டாக்டர் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். கிளினிக் வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலியும் செலுத்தினர்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 2 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்த மருத்துவர் பாலசுப்பிரமணியம் தனது கட்டணத்தை 10 ரூபாயாக உயர்த்தினார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கட்டணத்தை 20 ரூபாயாக உயர்த்திய நிலையில், ஏராளமான மக்கள் இவரது கிளினிக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

கோவை மாநகரில் சாதாரண ஆலோசனைக்கு கூட 200 ரூபாய் 300 ரூபாய் என மருத்துவர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். இந்த நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காவே வாழ்ந்த மருத்துவர் இறந்து போனது கோவை பகுதி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...