சிங்கப்பூரில் போதை மருந்து கடத்திய இருவருக்குத் தூக்கு

சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டவர் இருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் சிஜியோக் ஸ்டீபன் ஒபியோகா, (38). கால்பந்து வீரராக சிங்கப்பூருக்கு வந்த அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 2.7 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் பிடிபட்டார்.
அதேபோல், மலேசியாவைச் சேர்ந்த தேவேந்திரன் சுப்ரமணியம் (31). கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 2.7 கிலோ போதைப் பொருள் கடத்தியதாக இவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதில், 83.36 கிராம் ஹெராயின் போதை மருந்தாகும்.
சிங்கப்பூர் சட்டப்படி 500 கிராமுக்கு மேல் போதை மருந்து வைத்திருந்து பிடிபடும் நபருக்கு தயவுதாட்சண்யமின்றி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் 2.7 கிலோ போதைப் பொருளை வைத்திருந்ததைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடைசி வாய்ப்பாக தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க, இருவரும் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இவர்களது கருணை மனு வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவருக்கும் வியாழக்கிழமை தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொலை, போதை மருந்து கடத்தலுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...