உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி

ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக கழிப்பறை தினம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "யூ அண்ட் ஐ" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இன்று இப்பேரணியை நடத்தியது. இப்பேரணியில், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சென்றனர்.



இது குறித்து கோவை 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் தலைவர் சோனி அகுஜா பேசுகையில்:- நவம்பர் 19-ம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் தூய்மை இந்தியா இயக்கம் தெரிவித்துள்ளது. இதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'ஹாப்பி பீட்' என்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.



இதில் திறந்த வெளி கழிப்பறை முற்றிலுமாக தடுப்பதற்கும், குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான வகையில் கழிப்பறை வசதி செய்து கொடுப்பது போன்றவற்றையே 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் குறைந்த நபர்களால் தொடங்கப்பட்டு, இன்று இந்தியாவில் 10 நிறுவனங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...